தமிழகம்

மக்கள் பாதை சார்பாக தகவல் அறியும் உரிமைச் சட்ட பயிற்சி வகுப்பு

71views
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் நேர்மையாளர் உ.சகாயம் இ.ஆ.ப (வி.ஓ) அவர்களின் வழிகாட்டுதலில் செயல்படும் மக்கள் பாதை சார்பாக தகவல் அறியும் உரிமைச் சட்ட பயிற்சி வகுப்பு  நடைபெற்றது.
மக்கள் பாதை அயலக பொறுப்பாளர் இராவணன் குமார் வரவேற்புரை ஆற்றினார். மக்கள் பாதை நீதி திட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் ஜான் சேவியர் பிரிட்டோ வாழ்த்துரை வழங்கினார்.  மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை நிறுவனர் RTI ஹக்கிம் அவர்கள் மிகச்சிறப்பாக பயிற்சி அளித்தார்.
தகவல் அறியும் உரிமை சட்ட பயிற்சியாளர் ஹக்கிம் அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த பிரிவுகள், பிரிவுகளை எவ்வாறு பயன்படுத்துவது, தகவல்களை எவ்வாறு மனு மூலம் கேட்பது, கடந்த கால அனுபவங்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சியின் வரவு செலவு விவரங்களை இணையத்தில் எவ்வாறு காண்பது, இணையத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை எப்படி பயன்படுத்துவது போன்றவற்றை மிக தெளிவாக உதாரணங்கள் மேற்கோள்காட்டி பயிற்றுவித்தார்.

பயிற்சியின் இறுதியில் RTI சம்பந்தமாக கலந்துரையாடல் மற்றும் கேள்வி பதில்களுக்கு மிக சிறப்பான முறையில் விளக்கம் கூறப்பட்டது.  இந்நிகழ்வில் மக்கள் பாதை தோழர்கள் தமிழரசு , வீரக்குமார், மக்கள் பாதை நூருல் அமீன் , கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஊழல் எதிர்ப்பு தமிழ் போராளிகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமேனி நன்றியுரை கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!