38 நீர்ப்பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் வேண்டி, பொதுப்பணித்துறை அதிகாரியிடம் விவசாயிகள் கோரிக்கை மனு…
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள 38 நீர் பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் வேண்டி பொதுப்பணித்துறை அதிகாரியிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமங்கலம் தொகுதியில் உள்ள வடகரை, கீழக்கோட்டை, நெடுமதுரை கல்லணை, அரசப்பட்டி உள்ளிட்ட 14 கிராமங்களில் உள்ள 38 நீர் பாசன கண்மாய்களுக்கு இதுவரை தண்ணீர் இன்றி விவசாயிகள் வேதனையுடன் இருக்கும் நிலையில், ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு, இதுவரை மழை நீரோ , வைகை தண்ணீரோ இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். தற்போது பெருமளவில் வைகை அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், அந்த வீணாகும் தண்ணீரை திருமங்கலம் தொகுதியில் உள்ள 38 நீர்ப்பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் அனுப்பக் கூறி, திருமங்கலத்தில் உள்ள பொதுப்பணித்துறை அதிகாரியிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த கோரிக்கை மனுவினை பெற்ற அதிகாரி, உரிய நடவடிக்கை எடுக்க உறுதி அளித்துள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்