தமிழகம்

புகையில்லா பொங்கல் நிகழ்ச்சியில் பணியாளர்களை எதிர்பார்க்காமல் களத்தில் இறங்கி தூய்மை பணி செய்த துப்புரவு ஆய்வாளருக்கு குவியும் பாராட்டுக்கள்

75views
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, புகையில்லா பொங்கல் நிகழ்ச்சி பேரூராட்சி 18 வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றது.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக, இந்த நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவர் செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர் .
அப்போது நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பு கோவில் வளாகத்தை தூய்மை செய்யும் பணி தொடங்கியது.  இதில், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் வர காலதாமதம் ஆனதால், தூய்மை பணி கருவிகளை எடுத்துக்கொண்டு துப்புரவு ஆய்வாளர் தானே களத்தில் இறங்கி தூய்மை பணியை மேற்கொண்டார். அப்போது, அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவரை பெரிதும் பாராட்டி சென்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!