தமிழகம்

குச்சனூர் பேரூராட்சியில் பொது மக்களின் அடிப்படை தேவையான பொதுக் கழிப்பிடம் விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது.

106views
தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் பொது மக்களின் அடிப்படை தேவையான பொதுக் கழிப்பிடம் ரூபாய் 17.5 லட்சத்தில் அமைக்க கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தக் கட்டுமான பணி ஒப்பந்ததாரர் ரமேஷ் , இன்னும் ஓரிரு மாதங்களில் கட்டிடம் முழுமை அடைந்து விடும் பின்பு பேரூராட்சித் தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பார்வையிட்ட பின்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.

மேலும் பேரூராட்சியில் ஏற்கனவே இருந்த கழிப்பறை பழுது அடைந்ததால் புதிய பொது கழிப்பறை கட்டுவதற்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு பணிகள் முடிவுக்கு வர உள்ளது எனவும் தெரிவித்தார். பேரூராட்சி தலைவர் இதுகுறித்து கூறும் போது பொதுமக்கள் பொது கழிப்பறை இல்லாமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி இருந்தனர். ஆகவே கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி பொதுக் கழிப்பறை கட்ட அரசு விதித்துள்ள விதிகளின்படி ரூபாய் 17.5 லட்சத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!