சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில், காவல்துறையை கண்டித்தும், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தை கண்டித்து பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, உதவி செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரியுடன் பத்திரிக்கையாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த மாதம் 24 ஆம் தேதி தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிவகங்கையில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தை ஆய்வு செய்தபோது, செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை செய்தி சேகரிக்கவிடாமல் காவல்துறை ஆய்வாளர் தடுத்து தகாத வார்த்தைகளால் பேசினார். இதனைக் கண்டித்து, இன்று சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு பத்திரிக்கையாளர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், உதவி மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரியும் ராஜா செல்வம், பத்திரிக் கையாளர்களிடம் சமாதானம் பேச வந்த போது, பத்திரிக்கையாளர்களிடம் தேவையில்லாத கேள்விகள் எழுப்பியதால், பத்திரிக்
கையாளர்களுக்கும் உதவி மக்கள் தொடர்பு அலுவலருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதன் பின் சமாதானமடைந்த பத்திரிக்கையாளர்களை, காவலர்கள் மாவட்ட எஸ்.பியிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றனர்.
நடிகர், இயக்குனர் டான்ஸ்மாஸ்டர் தயாரிப்பாளர் என பண்முகம் கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் ஏற்கனவே பல நூறு ஆதரவு அற்ற குழந்தைகளை பராமரித்து அவர்களை சமுதாயத்தில் ஓரு...
ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள் ஆன்மீகப் பயணமாக கம்போடியாவிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டின் பிரதமர் திரு. ஹன் மானெட் சத்குருவை வரவேற்று, வாழ்த்தி எழுதிய...
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராசி அழகப்பன் எழுதியுள்ள சைக்கிள் நாவலை மையமாக கொண்டு May 3 ல் வெளிவரும் படம் குரங்கு பெடல். 70 80 காலகட்டங்களில்...
செய்தக்க வல்ல செய்யக் கெடுஞ் செய்தக்க செய்யாமை யானுங் கெடும்.. - இது நம் திருக்குறள்! இதுதான் இன்றைய அரைவேக்காட்டு சாப்பாடு. அதாவது நம் நாட்டு அரசியல்?!...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.