தமிழகம்

தமிழ்த் தன்னுரிமை இயக்கம் செய்தியாளர் சந்திப்பு

340views
இடம்: சென்னை செய்தியாளர் அரங்கம்
நாள்: 19-10-2022
ஊடகம்- செய்தித்தாள் மற்றும் தொலைக் காட்சிகளுக்கான செய்தி:
இந்திய அரசு தற்போது அளித்துள்ள மைய அரசின் பாடதிட்ட கொள்கையை வரவேற்கிறோம். அதே வேளையில் இந்தியாவின் மூத்த மொழி தமிழையும் இந்திமொழியுடன் இணைந்த ஆட்சி மொழியாகவும் அறிவிக்க வேண்டும்! என கோரிக்கை வைக்கின்றோம்.
இந்தியா என்பது பல்வேறு மொழி, இனங்கள் என வாழும் ஒரு பெரிய மக்கள்நாடு. இன்றைய உலகின் முதன்மையான மக்களாட்சி நாடும் கூட இதுவே. இந்த நாடு ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் இருந்து விடுதலை பெற்ற பின்பும் கூட அது தன் நோக்கத்தை இதுவரையில் எட்டவில்லையே என நினைத்தேங்கி கிடந்த மக்களுக்கு இப்பொழுது விடிவு போல பல்வேறு இந்திய மொழிகளுக்கும்.. படிப்பும் கல்வியும் உறுதியாக்கும் வகையில் உள்துறை அமைச்சர் மாண்புமிகு திரு அமித்சா அவர்களின் தலைமையில் அமைந்த நாடாளுமன்றக்குழு இந்திய மொழிகளுக் கெல்லாம் மைய அரசின் ஐஐடி என்னும் தொழில்நுட்ப கல்வியிலும் அது நடத்தும் கேந்திர வித்யாலயா பள்ளிகளிலும் அது அமைந்துள்ள மாநில மொழிகளுக்கு ஒதுக்கியும் தமிழ், இந்தி, மராத்தி, குஜராத்தி வங்காளம் பஞ்சாபி, கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளுக்கும் இடமளிக்க மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ அவர்களிடம் அளித்துள்ள கோரிக்கையினை இச்செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ்த் தன்னுரிமை இயக்கமும் அதன் தோழமை கட்சி, அமைப்புகளும் வரவேற்கிறது.
இது நம் நாட்டு மக்களுக்கும் அவர்தம் உரிமைகளுக்கும் கிடைத்துள்ள நல்வாய்ப்பாக எண்ணி மகிழ்கிறோம்.
அதே வேளையில், இந்திய அரசிடம் பல ஆண்டு காலமாக முறையிட்டும் ஏற்பில்லாமல் புறந்தள்ளி வரும் தமிழ்நாட்டு மக்களின் தனிக் கோரிக்கையாகவும் இந்தியாவெங்கும் பரவி வாழும் தமிழ்மக்களின் வேட்கையாகவும் இருக்கும்.. *தமிழ் மொழியையும் இந்தி மொழியுடன் இணைத்து இந்தியாவின் இன்னொரு ஆட்சிமொழியாக* ஏற்று அறிவிக்கச் செய்யவும் வேண்டுமென்ற கோரிக்கையையும் இதன் வழியாக இந்தியாவின் தலைமையமைச்சர் மாண்புமிகு திரு நரேந்திர மோடி அவர்களுக்கும்.. இந்திய குடியரசுத் தலைவர் மேன்மைமிகு திரௌபதி முர்மு அவர்களுக்கும் இதன்வழியாக தமிழ்த் தன்னுரிமை இயக்கத்தின் சார்பில் கோரிக்கையாக வைக்கின்றோம்.
நம் நாடு விடுதலை அடைந்த உடன் செய்திருக்க வேண்டிய இம்முயற்சிகளை நாம் செய்யாமல் போனதால்.. நம் நாட்டு மொழிகளின் வளர்ச்சியும் வாழ்வும் பல தடைகளை கொண்டு இன்றும் பின்னடைவுகளை சந்தித்து வருகின்றன. இது சுதந்திர நாட்டில் கடை பிடிக்கப்படும் அடிமைத்தனம் போலவே இருக்கின்றது. நமக்கு இப்போக்கு மக்களுக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்று, உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் மக்கவை கொண்ட மொழியாகவும் பல நாடுகளில் சிறுபான்மை மக்களை கொண்டு இந்தியாவின் பெயரை தன் தலைமேல் சுமந்து பெருமைப்படுத்தும் மக்களின் மொழியாகவும் இருக்கும் தமிழ்மொழியை இந்நூற்றாண்டில் அழிந்து விடும் மொழிகளின் பட்டியலில் இணைத்து அபாய அறிவிப்பு செய்துள்ளது ஐ நா பெருமன்றம். தமிழ்மொழி பலவகையிலும் இந்தியாவின் பழம்பெருமையின் அடையாளமாகும். அதுவும் ஒரு உயர்தனிச் செம்மொழியென பேசும் அளவிற்கு தகுதி படைத்ததுமாகும். அதன் காரணமாகவே *இந்திய ஆட்சிமொழி சட்டம் உருவாக்கப்பட கூட்டிய கூட்டத்திலேயே தமிழை இந்தியாவின் ஆட்சிமொழியாக என்க வேண்டுமென முன்னெடுத்துப் பேசப்பட்டது. தமிழ்மொழியின் தனி சிறப்பை அறிந்த முன்னாள் தலைமையமைச்சர்அ திரு வாஜ்பாய் அவர்கள். காலத்தில் செம்மொழி யென்ற சட்டம் பாராளுமன்றத்தில் சட்டமியற்றப்பட்டது.*
நம் நாடும் மக்களும் தங்களின் தனி சிறப்புகளை வளங்களை இழக்காமல் காத்து வளர்த்தெடுக்கும் உயரிய நிலையில் செயல்பட எழுந்து நிற்கும் அரசுகளிடம் இதனை கோரிக்கையாக வைப்பதில் பெருமை கொள்கிறோம்.
எந்த ஒரு நாடும் அடிமைபட்டிருந்த காலங்களில் இருந்த அடிமை எண்ணங்களோடே வாழாமல் புதிய எண்ணங்கள் செயல்பாடுகளே அதன்மொழியும் இனமும் ஆளுமையை இழந்து வாழ்ந்த காலங்களை மாற்றிப் போடும்.
அவ்வகையில் நம் பாரம்பரிய பெருமைகள் நிலைத்து வாழச் செய்ய முடியும்.. என நம் மொழிகளை ஆளவைப்பது என்பது இயற்கையே. அந்த நினைவுகளோடு நம்மொழிகளுக்கு உரிய இடமளிக்காமல் அடிமை செய்த மொழிகளுக்கே ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதாக இருக்கும் மொழிக் கொள்கைக்ககு தடைபோட்டு தாய்மொழிகளுக்கு நல்ல தொடக்கத்தை கொடுக்கும் இந்திய அரசிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வடைகிறோம்.
வாழிய செந்தமிழ்.. வாழ்க நற்றமிழர்..
வாழிய பாரத மணித்திருநாடு!
வணக்கம்.
இப்படிக்கு
பாவலர் மு இராமச்சந்திரன்
தலைவர். தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.
வெளியீடு: முனைவர் அயனானாவரம் பாபு
கொள்கை பரப்பும் செயலாளர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!