தமிழகம்

தேனியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மனு கொடுக்கும் போராட்டம்

39views
தேனி மாவட்டம் தேனியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். பெரியகுளம் வட்டாரத்தில் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு சில்வார்பட்டி கிராமம் சர்வே எண் 121 ஒன்றில் 22 ஏக்கர் தேவதானப்பட்டி கிராம சர்வே எண் 21 90 ஆகிய அரசு புறம்போக்கு நிலத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தாலுகா செயலாளர் முஜிபுர்ரகுமான் மாவட்ட குழு உறுப்பினர் காசி விஸ்வநாதன் தாலுகா துணை செயலாளர் ஞானவேல் மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் மாவட்ட செயலாளர் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!