தமிழகம்

சோழவந்தான் மேலரத வீதி இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக 50.ம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது

157views
மதுரை மாவட்டம் சோழவந்தான் மேலரத வீதி இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக ஆண்டுதோறும் மூன்று நாட்கள் பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.  இந்த ஆண்டு மேலரத வீதி இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக 50ஆம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் மூன்று நாட்கள் நடைபெற்றது.  சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டியினை துவக்கி வைத்து பரிசுகளை நகர அரிமா சங்கத் தலைவர் பேரூராட்சிகவுன்சிலர்டாக்டர் எம். மருது பாண்டியன் வழங்கினார் ‌. சிறுவர் சிறுமியருக்கான கலை நிகழ்ச்சி போட்டிக்கு பேரூராட்சி தலைவர் எஸ். எஸ் .கே .ஜெயராமன் சத்திய பிரகாஷ் மற்றும் முன்னாள் துணைத் தலைவர் கொரியர் கணேசன் பரிசுகளை வழங்கினர்.

மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக தேவகோட்டை அபிராமி குழுவினரால் மாபெரும் கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக எம். வி. எம் குழுமங்களின் தலைவர் எம்.மணி முத்தையா கலந்து கொண்டார்.  சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.  மேலரத வீதி இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் தலைவர் எம் .சுரேஷ், செயலாளர் பாஸ்கர், பொருளாளர் தினேஷ் மற்றும் நன்றியுரையினை விழா குழு தலைவர் தன்ராஜ் வழங்கினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!