தமிழகம்

காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் நியாயவிலைக்கடையில் பொங்கல் பரிசு தொகுப்பை ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் துவக்கிவைத்தார்.

108views
தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத்தொகுப்பான ரூ1000, முழு கரும்பு, 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி இன்று முதல் ரேசன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்த நிலையில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் துவக்கிவைத்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் உள்ள நியாயவிலைக்கடையில் பிரம்மபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன், பொங்கல் தொகுப்பை கார்டுதாரர்களுக்கு வழங்கினார். உடன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் (தமிழரசி) வெங்கடேசன், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் உஷா, நியாயவிலைக்கடை விற்பனையாளர் குமரேசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசியல் கட்சியினர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!