தமிழகம்

பிரச்சாரத்திற்கு இடையூறு செய்வதாக செய்தியாளரை கண்டித்த அண்ணாமலை.

19views
கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் அண்ணாமலை இன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி வாகனம் அண்ணாமலை சென்ற பிரச்சார வாகனத்திற்கு வழி விடாமல் சென்றதாகவும் இதனால் செல்ல வேண்டிய இடத்திற்கு காலதாமதம் ஏற்படுவதாக கூறி செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு அழைத்து பேசி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வைக்காதீர்கள் பரப்புரைக்கு இடையூறு செய்ய வேண்டாம் என தனது கண்டனத்தை தெரிவித்தார். செய்தியாளரிடம் பாஜக தலைவர் அண்ணாமலை வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர்; தேவி,சென்னை.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!