தமிழகம்

சாத்தூரில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது

91views
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (25). கூலி வேலை பார்த்து வரும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி, தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். வழக்குபதிவு செய்த போலீசார், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கார்த்தியை, போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!