தமிழகம்

மதுரை சோழவந்தான் பிரளயநாத சிவன் கோவிலில் புத்தாண்டு முதல் பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

55views
மதுரை மாவட்டம்.சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாத சுவாமி சிவன் கோவிலில் புத்தாண்டு முதல் பிரதோஷ விழா மிக சிறப்பாக நடந்தது.  இவ்விழாவை முன்னிட்டு சனீஸ்வர லிங்கம் நந்திகேஸ்வரர் சிவனுக்கும் பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது பின்னர் சுவாமியும் அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தனர். விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் சுவாமியுடன் திருக்கோவிலை வலம்.வந்து சிவாய நமக சிவாய நமக என்று சொல்லி வந்தனர்.சிறப்பு அர்ச்சனை பூஜைகள் நடைபெற்றது.
ஏற்பாடுகளை பிஜேபி மாநில விவசாய அணி துணை தலைவர் மணி முத்தையா பள்ளி நிர்வாகி.வள்ளி மயில் சோழவந்தான் அரிமா சங்க தலைவர் டாக்டர்மருது பாண்டியன் உட்பட.பிரதோஷ கமிட்டினர் செய்திருந்தனர் ரவிச்சந்திர பட்டர் பரசுராம் சிவாச்சாரியார் ஆகியோர் பூஜைகள்.செய்தனர். பிரதோஷ விழாவில்.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!