தமிழகம்

ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடம் அருகே டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியரிடம் மனு

121views
இராமேஸ்வரம் தாலுகா தங்கச்சிமடம் ஊராட்சி கிராமங்களான தண்ணீர் ஊற்று,பேக்கரும்பு, சந்தியா நகர், அரியாங்குண்டு, நொச்சிவாடி,ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும், மாணவர்களும் பயன்படுத்தக்கூடிய மிகவும் பிரதான சாலையான பேக்கரும்பு தண்ணீர் ஊற்று இணைப்புச் சாலையில் புதிதாக டாஸ்மாக் மதுபான கடை திறப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெறுவதாகவும்,மதுபான கடை அமையவிருக்கும் பகுதி அருகில்  மேதகு டாக்டர் முன்னாள் பிரதமர் APJ.அப்துல் கலாம் அவர்களின் நினைவகமும்,மாணவ மாணவிகள் படிக்கக்கூடிய பள்ளிக்கூடம்,வழிபாட்டு தலங்களும்,  குடியிருப்புகளும் உள்ளது எனவும் மதுபான கடை திறப்பதற்கான நடைபெறக்கூடிய பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் தண்ணீர் ஊற்று கிராமத் தலைவர் சூசைரத்தினம், பேக்கரம்பு கிராமத் தலைவர் பழனிவேல்,
அரியாங்குண்டு கிராம தலைவர் அருள்தாஸ்,சந்தியா நகர் கிராம தலைவர் அந்தோணி சந்தியா
மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.கருணாகரன் ,தாலுகா செயலாளர் சிவா, மாவட்டக்குழு உறுப்பினர் ஜஸ்டின்,ஆரோக்கிய நிர்மலா,
தாலுகா குழு உறுப்பினர்கள்  அசோக், மணிகண்டன்  .ஜேம்ஸ் ஜஸ்டின் பழனிக்குமார் கிளை செயலாளர்கள் வெங்கடேஸ்வரி, மணிக்கண்ணன், பிளமின்ராஜ், அருள்தாஸ், பவுல்ராஜ்,.அருள்ராஜ்,திரவியம், உதயகுமார் உள்ளிட்ட மேற்கண்ட கிராமத்தைச் சேர்ந்த 200க்கும்
மேற்பட்ட பெண்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு வட்டாட்சியர் அவர்களிடம் மனு கொடுத்தனர்.

செய்தியாளர் : சந்தோஷ் சிவம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!