தமிழகம்

பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக அரசு ஊழியர்களுக்கும் 4% அகவிலைப்படி உயர்வு நிலுவை தொகையை மொத்தமாக வழங்க வேண்டி மாபெரும் ஆர்ப்பாட்டம்

34views
இன்று ( 29.12.2022 ) வியாழக்கிழமை மதிய உணவு இடைவேளையின் போது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் பெரியகுளம் வட்டக்கிளை சார்பாக தமிழக அரசை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கிய நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கியது போல் தமிழக அரசு ஊழியர்களுக்கும் 4% அகவிலைப்படி உயர்வு 01.07.22 முதல் நிலுவை தொகையுடன் மொத்தமாக வழங்கிட வேண்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பெரியகுளம் அரசு ஊழியர்கள் சங்க வட்ட கிளை தலைவர் சு.குமார்செல்வன் தலைமையில் டி. தங்க மீனா சத்துணவு துறை மாவட்ட தலைவர் முன்னிலையிலும் நடைபெற்றது. துவக்க உரை கண்ணன் நெடுஞ்சாலைத்துறை . வாழ்த்துரை வழங்கியவர்கள் கிருஷ்ணமூர்த்தி கருவூலக கணக்கு த்துறை. பவானந்தம் மருத்துவத்துறை. மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன் பட்டு வளர்ச்சி துறை, மணிகண்டன் கல்வித்துறை பூமிநாதன் பேரூராட்சி துறை மற்றும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களும், பேரூராட்சி, கல்வித்துறை, பொதுப்பணி, மருத்துவத் துறை,வருவாய் துறை, ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த ஊழியர்களும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை சிறப்பித்தனர். கூட்டம் முடிவில் அரசு ஊழியர்கள் சங்க பெரியகுளம் வட்ட கிளை பொருளாளர் கண்ணதாசன் நன்றி உரையுடன் கூட்டம் நிறைவேறியது.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!