தமிழகம்

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் இயங்கி வரும் மூன்று தனியார் மதுபான கடைகள் மற்றும் பார்களை அகற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

61views
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதி மற்றும் பள்ளி மருத்துவமனை கோவில்கள் அமைந்துள்ள பகுதிகளில் அடுத்தடுத்து மூன்று தனியார் மதுபான கடை மற்றும் பார்கள் இயங்கி வருகின்றன.
இதனால் பெரியகுளம் நகரின் பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும், பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்கும் இடையூறாக இருப்பதோடு மது அருந்தி விட்டு வரும் நபர்களால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் இன்று இயங்கி வரும் மூன்று தனியார் மதுபான கடைகள் மற்றும் பார்களை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரியகுளம் தென்கரை காந்தி சிலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர்: A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!