தமிழகம்

உசிலம்பட்டியில் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் பென்னிக்குக் நினைவாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

54views
தென் மாவட்ட மக்களின் குடிநீருக்கும்-பாசனத்திற்கு ஆதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையை கட்டியவர் கர்னல் பென்னிக்குக்.  இவரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போதும் அவரின் நினைவாக தேனி மதுரை ராமநாதபுரம் திண்டுக்கல் உள்ளிடட்ட தென்மாவட்ட மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடுவது வழக்கம்.இதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பென்னிகுக் படத்திற்கு 58 கிராம கால்வாய் பாசன சங்கத்தின் சார்பில் விவசாயிகள் பூப் போட்டு மரியாதை செலுத்தினர்.பின்னர் பொங்;கல் வைத்து வழிபட்டனர்.இந்நிகழ்ச்சியில் அதிமுக அமமுக திமுக பார்வர்ட் பிளாக் உள்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!