Uncategorizedதமிழகம்

கெங்குவார்பட்டி பகுதியில் இரு சமுதாயத்திற்கு இடையே மோதல் ஏற்படும் பதட்ட சூழ்நிலை

81views
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியில் வினோத் மற்றும் ஜெகதீஸ்வரன் ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் மது அருந்தி கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த 10 பேர் கொண்ட கும்பல் இருவரையும் கத்தி மற்றும் அரிவாளால் வெட்டி தாக்கியதில் ஜெகதீஸ்வரன் சம்பவ இடத்தில் பலியானார், மேலும் வினோத் என்பவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் கெங்குவார்பட்டி மற்றும் ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்த செல்வம், சதீஷ், விக்னேஷ், ராஜபாண்டி உள்ளிட்ட 4 நபர்களை காவல் துறையினர் கைது செய்த நிலையில் அவர் மீது கொலை வழக்கு பதிவு நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் இந்த கொலை சம்பவத்திற்கு முக்கிய காரணமான பிரசாத் கிரண் மற்றும் அவரது நண்பர்கள் மேலும் எட்டு பேரை காவல்துறை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
இந்த கொலை சம்பவத்தால் கெங்குவார்பட்டி பகுதியில் இரு சமுதாயத்திற்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகுதல் தொடர்ந்து மூன்றாவது நாளாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!