தமிழகம்

பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் பணி

101views
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா சாத்தனூர் ஊராட்சி ஆணையார் கோட்டை தொடக்கப் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் பணி நடந்தது. தொண்டி நேசம் அறக்கட்டளை நிறுவனர், தலைவர் கோட்டைச்சாமி தலைமையில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
கோட்டைச்சாமி கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நேசம் அறக்கட்டளை சார்பில் ஒரு லட்சம் பனை விதை, மரக்கன்றுகள் கடந்தாண்டு நடப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக மரம் வளர்பதன் அவசியம் குறித்து பள்ளி மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது என்றார். வீட்டுக்கு ஓர் மரம் வளர்ப்போம் என்ற சிந்தனை திட்டத்தின் கீழ்மாணவ மாணவிகள் அனைவருக்கும் சாத்தனூர் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி சுமன் மரக்கன்று வழங்கினார். அறக்கட்டளை நிர்வாகி கார்த்திக் ராஜா, பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ், கண்ணதாசன், அஜ்மல் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சாத்தனூர் பள்ளி மாணவர்களுக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!