தமிழகம்

வேலூரில் ரூ2.96 கோடி மதிப்பீட்டில் இந்து அறநிலையத்துறை அலுவலகம் கட்டும் பணியை காணொலி மூலம் முதல்வர் துவக்கிவைத்தார்.

38views
வேலூர் மாவட்டம் மற்றும் மாநகர் இந்துசமய அறநிலையத்துறை ஒருங்கிணைந்த இணைஆணையர் மற்றும் உதவி ஆணையர் அலுவலகம் ரூ 2.96 கோடியில் கட்டும் பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்திலிருந்து காணொலி மூலம் துவக்கிவைத்தார்.
வேலூர் ஊரீசு கல்லூரி எதிரில் உள்ள இந்து அறநிலையத்துறையின் சொந்த இடத்தில் இந்த விழா நடந்தது.  குத்து விளக்கு ஏற்றிவிழா துவக்கிவைக்கப்பட்டது.  இதில் வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த், வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர், மேயர் சுஜாதா, கோட்டாட்சியர் பூங்கொடி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு, மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் நா. அசோகன இந்து் அறநிலையத்துறை அலுவலர்கள், ஊழியர்கள், அறங்காவல் குழுவினர், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!