தமிழகம்

தேனியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா

58views
தேனியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் , மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் பொதுமக்கள் என அனைவருக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசளிப்பு விழா, தேனி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது. முதலில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சி தலைவர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த பரசளிப்பு விழாவில் பங்கேற்ற அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனை தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் தேனி மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கி சிறப்பித்தார். இதில் தேனி முத்து தேவன் பட்டி நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் தேனி சிவக்குமார் மகன் சபரிநாத், பள்ளி அளவில் சுவரொட்டி தயாரித்தல் போட்டியில், மாவட்ட அளவில் இரண்டாம் பரிசாக ரூ. 1000 ரொக்கப் பரிசு பெற்றார். இந்த நிகழ்ச்சியில் துறை சார்ந்த அலுவலர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், மகளிர் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!