தமிழகம்

ராஜபாளையத்தில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 135 பயனாளிகளுக்கு ரூ. 31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

45views
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த தெற்கு வெங்காநல்லூர் கிராமத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, பயிற்சி துணை ஆட்சியர் ஷாலினி, சாத்தூர் கோட்டாட்சியர் அனிதா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் வருவாய் துறை, ஊராட்சி ஒன்றிய துறை, சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, வேளாண்மை மற்றும் தோட்டக் கலைத் துறை சார்பில் முதியோர் உதவித் தொகை, வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல் உள்ளிட்ட ரூ. 31.33 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை 135 பயனாளிகளுக்கு ஆட்சியர் வழங்கினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!