தமிழகம்

பேர்ணாம்பட்டு அருகே பெண் குத்திகொலை. கணவன் கைது

105views
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த அழிஞ்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர் (43) கட்டிட மேஸ்திரி வேலை செய்துவருகின்றான். இவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையான காரணத்தால் இவனது முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் இதே கிராமத்தை சேர்ந்த புனிதா (32) 2 -வது திருமணம் செய்துகொண்டான். இவர்களுக்கு நிவேதா (9) நிதிஷ் (7) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு கோபித்து கொண்டு அதே ஊரில் உள்ள தனது தாய்வீட்டில் தங்கி ஆம்பூர் அருகே உள்ள சின்னவரிக்கம் பகுதியில் தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்துவருகிறார். புனிதாவேலை முடித்து பஸ் விட்டு வீட்டிற்கு இறங்கிவரும்போது, மதுபோதையில் இருந்த ஜெய்சங்கர், தான் வைத்திருந்த கத்தியால் புனிதாவை சரமாரியாக குத்தியதில் படுகாயம் அடைந்தவரை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த பேர்ணாம்பட்டு காவல்துறையினர் ஜெய்சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!