தமிழகம்

மதுரை அருகே வாடிப்பட்டியில்கார் டிரைவர் வெட்டி படுகொலை போலீசார் விசாரணை

239views
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டை பழனிஆண்டவர் கோவில் சாலையில் மலையடிவாரத்தில் மினரல் ஹோட்டல் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது இந்த நிறுவனம் தொடர்ந்து 5 ஆண்டுகளாக இயங்காமல் உள்ளது இங்குள்ள தென்னந்தோப்பில் சோழவந்தான் பூமேட்டுதெருவை சேர்ந்த நாகராஜன் மகன் சதீஷ் வயது 30 பொறுப்பாளராக பணியாற்றி வந்தார்
இந்நிலையில் சதீஷ் பழனி பாதயாத்திரை செல்ல முடிவு செய்து இதற்காக தனது அண்ணனான கார் டிரைவர் மருது பாண்டி என்பவரை தனக்கு பதிலாக தென்னந்தோப்பில் இருக்கச் சொல்லிவிட்டு பாதயாத்திரை புறப்பட்டார்
மருது பாண்டியு டன்.மதுரையைச் சேர்ந்த 17 வயது சிறுவனும் தோட்ட வேலை பார்ப்பதற்காக இங்கு தங்கி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை பாதயாத்திரை செல்வதற்கு முன் தனது அண்ணனிடம் தகவல் சொல்லிவிட்டு செல்ல சதீஷ் தென்னந்தோப்பிற்கு வந்துள்ளார்.  அப்போது மருதுபாண்டி முகம் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த சதீஷ் வாடிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் தகவலின் அடிப்படையில் வாடிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.  கார்டிரைவர்.மருதுபாண்டியுடன் இருந்த 17 வயது சிறுவனைபோலிசார்தேடிவருகின்றனர். இந்த சம்பவத்தை வாடிப்பட்டி பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!