தமிழகம்

தமுமுக மனிதநேய மக்கள் கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்

147views
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தமுமுக மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம் 15-11-2022 மாலை 6 மணியளவில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட தலைவர் K.சேக்பரீத் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மமக மாநில அமைப்பு செயலாளரும், மாவட்ட பொறுப்பாளருமான பழனி M.I.பாரூக் அவர்கள் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் -6 பயங்கரவாத எதிர்ப்பு நாளில் தமுமுக தலைமை அறிவித்துள்ள “வழிபாட்டுரிமைப் பாதுகாப்புக்கான பெருந்திரள் ஆர்பாட்டம்” கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரு மாவட்டங்களும் ஒருங்கிணைந்து திண்டுக்கல்லில் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தின் செயற்குழு கூட்டம் நவம்பர்-27 ஆம் தேதி வத்தலக்குண்டில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
ஆறாத ரணமாய் இருக்கும் டிசம்பர் – 6 பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட கருப்பு நாளை இவ்வாண்டு மிக எழுச்சியுடன் நடத்துவதென தீர்மானித்து, மாவட்டம் முழுவதும் சுவர் விளம்பரம் எழுத வேண்டுமெனவும், ஒட்டுமொத்த சமுதாய மக்களையும் ஓர் அணியில் திரள வைக்க டிசம்பர் – 6 பரப்புரைகளை தீவிரப்படுத்த வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம், மதுரை மாவட்டம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!