தமிழகம்

சிவகாசியில், கொசு ஒழிப்பு புகை தெளிக்கும் பணிகள் தீவிரம்

34views
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில், குளிர்காலத்தில் கொசுக்களினால் ஏற்படும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில், கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சிவகாசி மாநகராட்சி சார்பில், கொசு ஒழிப்பு புகை தெளிக்கும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பேருந்து நிலைய பகுதி, பஜார், நான்கு ரதவீதி பகுதிகளில், நடமாடும் வாகனம் மூலமாக கொசு ஒழிப்பு புகை தெளிக்கும் பணிகள் நடைபெற்றது.
இது குறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, கடந்த வாரங்களில் சிவகாசி பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் சாலையோரங்களில் தேங்கி நிற்கும் நீரில் கொசு உற்பத்தி சற்று அதிகரித்துள்ளது. கொசுக்கடியினால் ஏற்படும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்தும் வகையில், கொசுக்களை ஒழிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் கொசு ஒழிப்பு புகை தெளிக்கம் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று கூறினர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!