தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகே, நர்சிங் கல்லூரி மாணவி மாயம்

35views
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள அய்யனார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (43). இவரது மகள் தேவி (17). இவர் மதுரையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி தேர்வு விடுமுறைக்காக, தேவி அய்யனார்புரம் வந்திருந்தார். வீட்டில் இருந்த அவர், தோழிகளை பார்த்து வருவதாகக்கூறிச் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. ரமேஷ், தனது மகளை பல இடங்களில் தேடிப்பார்த்தும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து ரமேஷ், நத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!