தமிழகம்

ஆண்டிபட்டி தாலுகா எம். சுப்பலாபுரம் அருகே மனநலம் பாதித்த நிலையில் சுற்றி திரிந்த வாலிபரை மீட்டு பெரியகுளம் அரசு தலைமை மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்

39views
ஆண்டிபட்டி தாலுகா எம். சுப்பலாபுரம் அருகே மனநலம் பாதித்த நிலையில் சுற்றி திரிந்த வாலிபரை மீட்டு பெரியகுளம் அரசு தலைமை மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று மாலை எம்.சுப்புலாபுரம் அருகே மனநலம் பாதித்த நிலையில் வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்தார். எம்.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் என்.ரஞ்சித் குமார் அவர் குறித்து விசாரித்த போது தாயை இழந்து ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிந்ததும் அவர் பெயர் கல்வேந்திரன் 30, என்பதும் தெரிய வந்துள்ளது. க. விலக்கு போலீசார் உதவியுடன் அவரை மீட்டு சுத்தம் செய்து பெரியகுளம் அரசு தலைமை மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மனநலம் பாதித்து சுற்றித்திரிந்த வாலிபரை மீட்டு பாதுகாப்பாக மருத்துவ மனையில் சேர்த்த நிகழ்வை அப்பகுதி மக்கள் பாராட்டி உள்ளனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!