தமிழகம்

ராஜபாளையத்தில் நடைபெற்ற நடைபெற்ற மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

82views
ராஜபாளையத்தில் நடைபெற்ற நடைபெற்ற மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். எம்பி தேர்தலில் விருதுநகரில் துரை வைகோ போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும், 40 சதவிகித சொத்து வரியை குறைக்க வேண்டும், தமிழகம் என்ற ஆளுனரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றம். ஆளுனர் தனது உரையை திரும்ப பெறாவிட்டால் மதிமுக சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்படும் என எம்எல்ஏ பேட்டி.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டிபி மில்ஸ் சாலையில் உள்ள திருவள்ளுவர் மன்றத்தில் மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அக் கட்சியின் மாவட்ட செயலாளரும் சாத்தூர் எம்எல்ஏ வுமான டாக்டர் ரகுராமன் தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்சி தொண்டர்கள் மகளிரணியினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
எம்பி தேர்தலில் விருதுநகர் தொகுதியில் துரை வைகோ போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும், தமிழ்நாடை தமிழகம் எனக்கூறிய ஆளுனர் ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், அவர் தான் பேசியதை திரும்ப பெற வேண்டும், அல்லது மதிமுக சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்படும்,
ராஜபாளையம் நகரில் 40 சதவிகிதம் உயர்த்தப்பட்ட குடிநீர், சொத்து வரியை குறைக்க வேண்டும், ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், சாலை மரணங்களை தவிர்க்க மேம்பாட்டு பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை மூட வேண்டும்,
ராஜபாளையத்தில் அரசுக் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் குறித்து பேட்டியளித்த எம்எல்ஏ ரகுராமனிடம் ஆலங்குளம் சிமிண்ட் ஆலை குறித்து கேட்ட போது, ஆலையை நவீனப்படுத்த ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட ரூ. 40 கோடி நிதியுடன் கூடுதலாக 80 கோடி ஒதுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,
ஆஸ்பெட்டாஸ் மீண்டும் தயாரிக்கவும், உலர் பதன முறைக்கு மாற்றவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். நகரில் உள்ள மரண குழிகள் பாதிப்பு உள்ள இடங்களை கண்டறிந்து விரைவில் மூடவும், பொது மக்களின் சிரமத்தை குறைக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
செய்தியாளர் :வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!