தமிழகம்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சரின் குடும்பத்தினர் திருமண அழைப்பிதழ் வைத்து சாமி தரிசனம் செய்தனர்

236views
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமாரின் குடும்பத்தினர் தங்களது இல்ல திருமண விழாவின் அழைப்பிதழை வைத்து சாமி தரிசனம் செய்தனர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வருகின்ற பிப்ரவரி 23 அன்று மதுரை மாவட்டம் டி குன்னத்தூர் அருகில் உள்ள அம்மா கோவிலில் அதிமுக மாநில அம்மா பேரவை சார்பில் நடைபெறும் 51 திருமண விழாவில் தனது மகளின் திருமணமும் நடைபெற உள்ள சூழ்நிலையில் அதற்கான அழைப்புதல்களை ஆர்பி உதயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர்.மதுரை மாவட்டத்தின் பல கோவில்களில் வைத்து சாமி தரிசனம் செய்து வருகினறனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று காலை சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவிலில் திருமண அழைப்பிதழை அம்மன் சன்னிதானத்தில் வைத்து சாமி தரிசனம் செய்தனர் இதில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், சோழவந்தான் நகர இளைஞரணி செயலாளர் கேபிள் மணி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!