தமிழகம்

ராஜக்காபட்டியில் வெடிக்கு பதிலாக செடிகள் வைத்து கொண்டாடிய 58 கிராம இளைஞர் சங்கத்தினர்

93views
தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், இதனை மாற்றும் முயற்சியில் 58 கிராம இளைஞர் சங்கத்தின் சார்பில் மதுரை மாவட்டம் எழுமலை அருகே ராஜக்காபட்டியில் வெடிக்கு பதிலாக செடிகள் ,மரக்கன்றுகள் வைத்து தீபாவளியை வித்தியாசமான முறையில் கொண்டாடினர்.
இதில் அரசமரம்,புங்கமரம், அத்தி, வேம்பு ,நாவல், கடம்பம் போன்ற ஐம்பதுக்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வைத்து வெடிக்கு பதிலாக செடிகள் வைத்து பசுமை நகரத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் ராஜக்காபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா பால்ராஜ் , 58 கிராம இளைஞர் சங்க தலைவர் சௌந்தரபாண்டியன் உட்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்: உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!