கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டு விழாவினை கொடியசைத்து துவக்கி வைத்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், கண்டுப்பட்டி கிராமத்தில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, நடைபெற்ற மஞ்சுவிரட்டு விழாவினை, கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் கு.சுகிதா, காளையார்கோவில் வட்டாட்சியர் பஞ்சவர்ணம், கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் பில்லப்பன், உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசுகையில், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு ஆகியவைகள் ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினை முன்னிட்டு, அனைத்துக் கிராமப்புறப் பகுதிகளிலும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
அதில், குறிப்பாக, வரலாற்று சிறப்பு மிக்க நமது சிவகங்கை மாவட்டத்தில், பல்வேறு கிராமப்புறப் பகுதிகளில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள் தமிழர் திருநாள் பொங்கல் விழாவினை முன்னிட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதில், கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியும் புகழ் பெற்ற ஒன்றாக திகழ்ந்து வருகிறது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை எவ்வித இடையூறுன்றி சிறப்பாக தமிழகத்தில் நடத்திட, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கையின் அடிப்படையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில், கண்டுப்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி இன்றையதினம் சிறப்பாக நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்பதற்கென அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளுக்கும் உட்படுத்தப்பட்டு, பல்வேறுப் பகுதிகளிலிருந்து 141 காளைகளும், 75 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
இவ்விழாவினை, ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தி வரும் கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டு ஒருங்கிணைப்பு குழுவினைச் சேர்ந்த அனைவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இவ்விழாவில் பங்கு பெற்றுள்ளவர்கள் அரசால் வகுக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றி, பாதுகாப்புடனும் இருந்து விழாவை சிறப்பாக நடத்திடுவதற்கு ஒவவொருவரும் உறுதுணையாக இருந்திட வேண்டும் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். முன்னதாக, கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டு விழாவினை முன்னிட்டு, மாடுபிடி வீரர்கள், கூட்டுறவுத்துறை அமைச்சர், முன்னிலையில், உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு கோவையைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்....
மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் சென்ற பயணிகளுக்கு நீர்,மோர் தர்பூசணி பழங்களை கொண்டு சென்று ஒவ்வொரு பேருந்தாக ஏறி ஏறி கோடை வெயிலுக்கு குளிர்ச்சியா...
RAYRISES என்பது ஆவணப்படங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சி, அம்சங்கள் மற்றும் சர்வதேச தயாரிப்புகளுக்காக முழுமையாக காப்பீடு செய்யப்பட்ட முழு-சேவை தயாரிப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும். தேசிய வர்த்தக இடங்கள்...
கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.