ராமேஸ்வரத்தில் இருந்து நாளை மறுநாள் (டிச.25) கிளம்பும் தொலை தூர ரயில்கள் மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் பொருத்தியுள்ள சென்சார் கருவியில் இன்று அதிகாலை 2:31 மணியளவில் ரெட் அலர்ட் ஒலித்தது. இதைதொடர்ந்து, ராமேஸ்வரம்-மண்டபம் இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டன. சென்சார் கருவி செயல்பாடுகளை கண்காணிக்கும் சென்னை ஐஐடி குழுவினர் ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்கும் வரை ரயில்களை மண்டபத்தில் இருந்து இயக்க அறிவுறுத்தியுள்ளனர்.
இதன்படி இன்றும், நாளையும் (டிச.24) ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் தினசரி ரயில்களில் திருச்சி, மதுரை பாசஞ்சர் ரயில்களை ராமநாதபுரத்தில் இருந்து இயக்கவும், சென்னை, கன்னியாகுமரி விரைவு ரயில்களை மண்டபத்தில் இருந்து கால அட்டவணை படி இயக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டிச.25 காலை, இரவு வேளைகளில் ராமேஸ்வரத்தில் புறப்பட வேண்டிய அயோத்தி, புவனேஸ்வர், ஹூப்ளி ஆகிய வாராந்திர ரயில்கள் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு செல்லவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
' ராமம் ராகவம் ' பட டீஸர் வெளியீட்டு விழாவில், டைரக்டர் பாலா, நடிகர்கள் சமுத்நிரகனி, சூரி, தம்பி ராமையா, பாபி சிம்ஹா, டைரக்டர்கள் பாண்டிராஜ், தீபக்,...
ஒரு நொடி : திரை விமர்சனம் தமிழ் சினிமாக்கள் சமீபகாலமாக நல்ல கதை அம்சத்துடன் வெளிவருவது கொஞ்சம் ஆறுதல். அப்படி ஆறுதல்படும் விதமாக வந்திருக்கும் படம் தான்...
கதையாழத்துடன் கூடிய மலையாளப் படங்கள் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் வெளியாகி பெரியளவில் வசூல் குவித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், மலையாள திரையுலகிலிருந்து ஒரு குழு தமிழில் 'ஆர் கே...
நவீன் லக்ஷ்மன், அருண்குமார் தயாரிப்பில் நவீன் லக்ஷ்மன் இயக்கத்தில் 'தீட்டு" சிங்கிள் டிராக் ஆல்பம் விரைவில் வெளிவரவுள்ளது. பெண்களின் மாதாந்திர அவஸ்தையை மையமாக கொண்டு உருவாகியுள்ள தீட்டு...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.