கணவன் மனைவி தகராறு வலி மருந்தை குடித்து இளம்பெண் தற்கொலை.
மதுரை ஸ்ரீராம் நகர் மகிழம்பூ தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் மனைவி ஜெயபானு 29. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ஜெயபானு வீட்டில் வலி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் .இந்த சம்பவம் குறித்து கணவர் ராஜேஷ் குமார் எஸ். எஸ். காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயபானுவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரிமேட்டில் திடீர் காய்ச்சலுக்கு வாலிபர் பலி – போலீஸ் விசாரணை .
கரிமேடு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராஜபாண்டி மகன் மோகனரங்கன் 26. இவருக்கு மூன்று நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. அதற்கான சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. மேலும் காய்ச்சல் அதிகமாகவே அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த சம்பவம்குறித்து அவருடைய அம்மா பஞ்சவர்ணம் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் மோகன ரங்கத்தின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கே புதூரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் – தூக்கு போட்டு தற்கொலை
கே புதூர் காந்திபுரத்தைசேர்ந்தவர் ஒய்யா தேவன் 46. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் .அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட ஒய்யாத் தேவன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி சங்கீதா கே. புதூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புது நத்தம் ரோட்டில்பைக்கில் சென்றவர் தவறி விழுந்து பலி – திடீர் பிரேக் போட்டதால் விபத்து.
புது நத்தம் ரோட்டில் பைக்கில் சென்றவர் திடீர் பிரேக் போட்டதால் நிலை தடுமாறி கீழே விழுந்து பலியானார். தபால் தந்தி நகர் ஸ்ரீ பாலாஜி நகரை சேர்ந்தவர் விஜய் சாமுவேல் 49 .இவர் புது நத்தம் ரோட்டில் புல்லட் ஓட்டி சென்று கொண்டிருந்தார். அந்த பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனை முன்பாக சென்றபோது திடீரென்று பிரேக் போட்டார். இதனால் வண்டி நிலை நிறமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜய் சாமுவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடல் நகரில் 21 கிலோ கஞ்சா உடன் 3 வாலிபர்கள் கைது
கூடல்புதூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துராமன். இவருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கூடல் நகர் ரயில்வே டிராக் குடோன் பின்புறம் திடீர் சோதனையில் ஈடுபட்டார். அப்போது அங்கு 21 கிலோ கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்தார். அந்த கஞ்சாவை பறிமுதல் செய்து பிடிபட்ட வாலிபர்கள் விசாரணை செய்தார். விசாரணையில் தத்தனேரி அருள்தாஸ் புரம் பிள்ளையார் கோவில் தெரு கணேசன் மகன் ஹரிஹரன் 22, சோழவந்தான் ஊத்துக்குளி வடக்கு தெரு ரமேஷ் மகன் விஜயேந்திரன் 23 என்று தெரிய வந்தது .அவர்கள் இருவரையும் கைது செய்தார்.
மதுரை புது ஜெயில் ரோட்டில் வாலிபர் கைது
கரிமேடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தண்டீஸ்வரன். இவர் புது ஜெயில் ரோட்டில் கஞ்சா விற்பனை செய்த முரட்டன் பத்திரியைச் சேர்ந்த வாலிபர் ரமேஷ் மகன் ரஞ்சித் குமார் 25 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.
1920 ஆம் ஆண்டு மதுரைக்கு அருகில் உள்ள பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயரின் குற்ற இனச் சட்டத்திற்கு எதிராகப் போராடி பதினாறு பேர் உயிர் தியாகம் செய்தனர். அந்த சம்பவத்தை...
இசையமைப்பாளர் பிரவீன் குமார் - 2021-ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வீரர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படம் மேதகு. இப்படத்திற்கு இசையமைத்து...
நடிகர், இயக்குனர் டான்ஸ்மாஸ்டர் தயாரிப்பாளர் என பண்முகம் கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் ஏற்கனவே பல நூறு ஆதரவு அற்ற குழந்தைகளை பராமரித்து அவர்களை சமுதாயத்தில் ஓரு...
ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள் ஆன்மீகப் பயணமாக கம்போடியாவிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டின் பிரதமர் திரு. ஹன் மானெட் சத்குருவை வரவேற்று, வாழ்த்தி எழுதிய...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.