தமிழகம்

காதலித்த பெண்ணை கர்ப்பிணியாக்கி மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற மணமகனை கையும், களவுமாக பிடித்த காதலி , காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம்.

274views
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள எஸ் எம் பி கல்யாண மஹாலில், இன்று காலை 7.30 மணி முதல் 9 மணி வரை திருமணம் செய்வது தொடர்பாக, திருமங்கலம் பாண்டியன் நகரைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் சின்னசாமிக்கும் , மற்றொரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெறுவதை அறிந்த, சின்னசாமியின் முன்னால் காதலியான நாகப்பிரியா, திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே ஓட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் ஆட்டோ தொழிலாளியான இவருடைய மகளாவார்.
.சின்னச்சாமி பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார், சிவில் இன்ஜினியர் படித்து முடித்தவர் என்று கூறப்படுகிறது. மேலும் நாக பிரியாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெறாமல் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது .இதனிடையே தான் சின்னச்சாமி நாக பிரியா – வை காதலித்து கர்ப்பம் ஆக்கியுள்ளார்.
நாகப்பிரியாவும், சின்னச்சாமியும் உறவினர்கள் என்று கூறப்பட்டுள்ள நிலையில் , காதலித்து கர்ப்பிணி ஆக்கியதுடன் நிறைமாத கர்ப்பிணி ஆனதை தொடர்ந்து , திருமணம் செய்து கொள்வதாக உத்தரவாதம் கொடுத்து, திடீரென கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தலைமறைவான சின்னசாமி , திருமங்கலத்தில் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்வதாக தகவல் அறிந்த நாகப்பரியா தனது பெற்றோருடன் அந்த திருமண மகாலுக்கு சென்று, திருமணம் நடைபெறுவதற்கு முன்பே மணமகளிடம் வாக்குவாதம் செய்து, திருமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் .
சம்பவம் குறித்து திருமங்கலம் மகளிர் போலீசார் சின்னசாமி – யையும், நாகப்பிரியாவையும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தன்னை ஏமாற்றி கர்ப்பிணி ஆக்கிய காதலன் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முயன்ற போது, கையும் களவுமாக பிடித்த காதலி குறித்து சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!