தமிழகம்

கே வி குப்பம் பிடிஓ கோபி, பாலியல் புகாரில் பணி இடை நீக்கம் – வேலூர் ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

125views
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பிடிஓவாகபணி புரிந்து வந்தவர் கோபி.பணி செய்யும் நேரத்தில் குடிபோதையில் வருவதும் பெண் ஊழியர்களிடம் நெருங்கி பழகுவதும் வாடிக்கையாகக் கொண்டு இருந்தார் இதன் காரணமாக பெண் ஊழியர்கள் அச்சத்துடன் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தனர் இந்த நிலையில்சம்பவத்தன்றுஒரு பெண் ஊழியரிடம் பிடிஓ கோபி மதுபோதையில் அத்து மீறியதாகபுகார் கூறப்பட்டது.இந்த சம்பவம் துறைரீதியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. அந்த விசாரணையில் பிடிஓ கோபிபாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது அதன் அடிப்படையில் வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பிடிஓவைபணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார் .கே வி குப்பம் பிடிஓ அலுவலகத்தில் இந்த சம்பவம் அரசு ஊழியர்கள் இடத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!