தமிழகம்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட கணவாய் காடு பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை

82views
சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட கணவாய் காடு பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து நிறுத்தம் நிழல் குடை அமைக்க கோரியிருந்தார்கள். கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கி இருந்தார். ஆனால் அந்த நிழல் குடையானது கனவாய்காட்டு மக்கள் கேட்ட இடத்தில் அமைத்து கொடுக்காமல் 74 கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 100 அடி தூரத்தில் அமைப்பதன முடிவு எடுத்துள்ளார்கள். அப்படி அமைக்கும் பட்சத்தில் அங்கு பேருந்து நின்று செல்லும். அதிகமான மக்களின் பயன்பாட்டில் இருக்கும் இடத்தில் பேருந்து நின்று செல்லாத சூழல் ஏற்படும். ஆகையால் இந்த இடத்தில் பேருந்து நிழற்குடை அமைப்பதை நிறுத்த நிழற்குடை அமைப்பதை எதிர்த்து கனவாய்காடு பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் முறையீடு செய்தனர். அந்த இடத்தை பேரூர் நகர செயலாளர் சு. பாலமுருகன், தலைவர் துணைத் தலைவர் சு.லோகாம்பாள், துணைத் தலைவர் மருந்தாம்பாள், கவுன்சிலர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் பார்வை செய்தனர் . செயல் அலுவலர் நடவடிக்கை எடுப்பதாக கூறி மக்களை சமாதானம் செய்தார்கள்.
செய்தியாளர் : ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!