தமிழகம்

கண்மாய் ஏலம் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து, கிராம வளர்ச்சிக்கு பயன்படுத்தும் கிராம மக்களுக்கு கொலைமிரட்டல் கொடுத்த தனி நபர் – கண்மாய் ஏலம் போவதை தடுத்து கிராம மக்களை தனி நபர் மிரட்டி வருவதால் கிராம மக்கள் காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

399views
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே காண்டை பஞ்சாயத்திற்கு உட்பட்ட எர்ரமல்லாம்பட்டி கிராமத்தில், கடந்த 27 ஆண்டுகளாக கிராமத்தில் உள்ள கண்மாய் ஏலத்தை வைத்து கிடைக்கும் வருமானத்தை, கிராம மக்கள் கிராமத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி வரும் நிலையில், பன்னிக்குண்டு கிராமத்தைச் சார்ந்த ஒரு நபர், கிராம கண்மாயை ஏலம் விட தடுப்பதுடன், 27 ஆண்டுகளாக கண்மாய் ஏலம் மூலம் கிராம வளர்ச்சிக்கு பயன்படுத்தி வரும் கிராம மக்களை கொலை மிரட்டல் மற்றும் வெடிகுண்டு வீசி கொலை செய்வதாக மிரட்டி வருவதால் , கிராம மக்கள் செய்வதறியாது காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்த கிராம மக்கள் , தமிழக முதல்வர் இதற்கு கிராம மக்களின் உயிரை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!