தமிழகம்

இராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தி பெண்கள் சாலை மறியல் போராட்டம்

41views
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மலையடிப்பட்டி 24 வது பகுதி மக்கள் முறையான குடிநீர் வழங்க கோரியும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று அப்பகுதி சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் ராஜபாளையம் டு சத்திரப்பட்டி செல்லும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் . பகுதி மக்கள் கூறும்பொழுது 15 தினங்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்வதாகவும் அதனை முறைப்படுத்தி குடிநீர் வழங்க வேண்டும் அதேபோல் இந்த பகுதியில் பேருந்து நின்று செல்வதற்கு நிழற்குடை அமைத்து தர வேண்டும் வாருகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும் என கோரியை வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மறையில் ஈடுபட்ட பொது மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் உத்தரவளித்த பின்பு சாலை மறியலில் கைவிட்டனர் சாலை மறியல் போராட்டத்தில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!