தமிழகம்

திருமங்கலம் அருகே , 2 ஆண்டிற்கு மேலாக சமையலறையுடன் ஒரே அறையினுள் பாதுகாப்பு இன்றி இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தால் , பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பின்றி இருக்கும் நிலை – சமையல் அறைக்கு தனி கட்டிடம் அமைத்து தர கோரிக்கை,

54views
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடகரை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் , கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அரசின் இ – சேவை மைய கட்டிடத்தினுள் இயங்கி வருகிறது .  அன்று முதல் ஒரே அறையில் சமையலறையும் வகுப்பறையும் இருப்பதால், பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பின்றி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் , அங்கன்வாடிக்கு தனி சமையலறை கட்டிடம் அமைத்துத்தரக்கூறியும் , கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும். இக்கட்டிடத்திலுள்ள அருகில் உள்ள அறையில் நியாயவிலைக்கடை உள்ளது. அதனருகே உள்ள அறையில் கிராம நிர்வாக அலுவலர் பணிசெய்யும் அலுவலகம் உள்ளது. ஒரே கட்டிடத்தில் இ – சேவை மையத்திற்காக அமைத்த இடத்தில் 3 அலுவலகங்கள், பாதுகாப்பின்றி இயங்கிவருகிறது.

எரிவாயு சிலிண்டர் மூலம் சமையலறை பணிகள் நடைபெறுவதால், பெரும் விபத்து நிகழும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!