தமிழகம்

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் – ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி சந்திப்பு

39views
காரைக்கால் முதல் தூத்துக்குடி வரை இசிஆர் ரயில்வே திட்டத்தை விரைவில் துவங்க வேண்டும். தங்கச்சிமடம் ரயில் நிலையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நரிக்குடி, திருச்சுழி, ராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம், சூடியூர், சத்திரக்குடி, வாலாந்தரவை, மண்டபம் கேம்ப் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும்.  ராமேஸ்வரம் – சென்னை ரயில் பெட்டிகளை புதியதாக மாற்ற வேண்டும்.  கொரோனா பொது முடக்கத்திற்க்கு முன் இயங்கிய ரயில்கள் அனைத்தையும் மீண்டும் இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ் கனி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் வலியுறுத்தினார்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!