கவிதை

நினைவு தின கவிதாஞ்சலி

263views
குற்றால… அருவியை… போன்று
வற்றாத…வள்ளன்மை கொண்டு
பொற்கால…ஆட்சியை தந்தவர்
முற்கால…முதல்வர் நம் – M G R
முக்காலமும் போற்றி மகிழும்
முழுமதி இராமச்சந்திரனின்
முப்பத்தி ஐந்தாம் – ஆண்டு
நினைவு நாள்…அஞ்சலி!
மண்ணுக்குள்ளிருந்து
பொன்னை…எடுத்து
புதையல் … என்று
மகிழ்வாருண்டு!
நாங்கள்மட்டும்
மண்ணுக்குள்
பொன்னை
புதைத்து
புண்பட்டு வாழ்கிறோம்
பொன் மனச்செம்மலின்
உண்மை… விசுவாசிகள்!
வாழ்க! எம்.ஜி.ஆர்! புகழ்!
கவிதாயினி தேவி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!