கவிதை

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

109views
கவிஞர் சேலம் சங்கர் எம்.ஏ.,
வினை தீர்க்கும் விநாயகனே
ஞாலம் காத்திடும் நாயகனே!
சீலனே! சிவபாலனே! தூயனே! துயர் தீர்ப்பவனே!
வினை தீர்க்கும் விநாயகனே!
ஞாலம் காத்திடும் நாயகனே!
துதிக்கும் வளைவினிலே ஓம் மந்த்ரம் ஜொலிக்கும்;
கதியென நிற்போர்தம் கனவுகள் பலிக்கும்.
தந்தத்தை எழுத்தாணி ஆக்கியவன்;
பாரத நூலினைத் தீட்டியவன்.
வள்ளியை முருகனொடு இணைத்தவனே
பக்தியினால் எமைப் பிணைத்தவனே!
முழுமுதற் கடவுள் நீயல்லவோ!
உயிர்கள் யாவும் உன் சேயல்லவோ!
காலத்தை சொல்லுகின்ற பரம்பொருளே!
ஞாலத்தை காத்திட வரம் அருளே!
வினை தீர்க்கும் விநாயகனே!
ஞாலம் காத்திடும் நாயகனே!

1 Comment

  1. Happy ganesh chaturthi to All !!!!
    Beautifully penned! 🙏✨ Every line beautifully captures the divine grace and blessings of Lord Ganesha.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!