இலக்கியம்கவிதை

இதயம் பேசுகிறது!

215views
பாழ்வெளியான‌ மனப்படுதாவில்‌
கனவுத் தூரிகையால்‌
வரைந்த ‌கைகளின்‌
வாரிசு‌ யார்‌?!
விழிகள்நடத்திய‌
அழகுப்போட்டியில்‌ மிரண்ட
முகத்திற்குப்‌ பொட்டு‌ வைத்துக்‌
கனவுகளை எல்லாம்‌
வெற்றி கொள்ள வைத்தவை
எந்த‌ இதயத்தின்‌ கீறல்கள்‌?!
நான் கொய்த கனிகளின்
நறுமணச்‌ சாறுகள்‌
பின்பு முகத்தின்‌ கைகளில்‌
என்கைகளிலோ‌
முள்ளின்‌ கீறல்கள்‌..
குயில்களின் கனவு‌ வானத்தில்‌
கழுகுக் கூட்டங்களின்‌ வட்டங்கள்‌
கழுகுகளை‌ வீழ்த்தும்‌
என்‌ கண்மணியே‌ நீ வாழ்க‌!
என் உள்ளத்தில்
உன்னை அங்கீகரிக்கின்றன!

எஸ் ஆர் ஹரிஹரன்
சென்னை ‌

Right Click & View Source is disabled.

error: Content is protected !!