தமிழகம்

உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு மறைந்த வேலு நாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா பாரதிய ஜனதா கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது.

72views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு சுதந்திர போராட்ட வீரர்களான மறைந்த வீரமங்கை வேலு நாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள் விழா பாரதிய ஜனதா கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் வேலு நாச்சியார் திருவுருவப்படத்திற்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவப்படத்திற்கும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாலை அணிவித்தும் மலர் தூவியம் மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நிர்வாகி நாகராசு ஏற்பாடு செய்திருந்தார். இதில் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் சுப்புராஜ்ஊடக துறை நகர தலைவர் வேல்முருகன் மூத்த நிர்வாகி போஸ் நகரத் துணைத் தலைவர் ரஜினி நகரச் செயலாளர் மகிழ்ச்சி உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!