தமிழகம்

கள்ளர் கல்விக்கழகத்தில் மோசடி மற்றும் பணக்கொள்ளையில் ஈடுபடும் செயலாளர் பாண்டியைக் கண்டித்து கள்ளர்கல்விக் கழக மீட்புக்குழு சார்பில் உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

703views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 15ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்களை உறுப்பினர்களாக் கொண்டது கள்ளர் கல்விக் கழகம்.உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி உள்பட இதற்குச் சொந்தமான சொத்துக்கள் தமிழகம் முழுவதும் உள்ளது.இதன் செயலாளராக இருப்பவர் பாண்டி.இவர் கள்ளர் கல்விக்கழக சொத்துக்களை முறைகேடாக விற்று மோசடியில் ஈடுபடுவதாகவும் கல்லூரியில் மாணவர்களிடம் முறைகேடாக பணம் பெற்று பணக்கொள்ளையில் ஈடுபவதாகக் கூறி சமூக ஆர்வலர்கள் தன்னார்வ அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளை உள்ளடக்கி கள்ளர் கல்விக்கழக மீட்புக் குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் சார்பில் கள்ளர் கல்விக்கழக செயலாளர் பாண்டியை கண்டித்து உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் பாண்டி மீது நடவடிக்கை எடுக்ககோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய மக்கள் பார்வர்ட் பிளாக் பெருங்கமாநல்லூர் மாயக்காள் நலச்சங்கத்தினர் உள்பட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!