தமிழகம்

ராஜபாளையம் அருகே, கடத்தப்பட்ட 21 ரேசன் அரிசி மூடைகள் பறிமுதல். வேன் ஓட்டுநர் கைது

51views
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள ஆலங்குளம் பகுதியில் ரேசன் அரிசி மூடைகள் கடத்தப்படுவதாக, மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஆலங்குளம் – ராஜபாளையம் சாலையில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் ஓட்டிவந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த வண்டியில் 50 கிலோ எடையிலான 21 மூடைகளில் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. கடத்தப்பட்ட ரேசன் அரிசி மூடைகள், சங்கரன்கோவில் பகுதியில் உள்ள ஒரு அரிசி அரவை ஆலைக்கு கொண்டு செல்வதாக தெரிந்தது. ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வேன் ஓட்டுநர் ஜெயபாலை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் 21 ரேசன் அரிசி மூடைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய வேனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!