தமிழகம்

தேனியில் மகளிர் குழுக்களுக்கு கடனுதவி

46views
திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்குதல், மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர் விருது வழங்குதல் மற்றும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் முடிவுற்ற பணிகள் தொடக்க விழா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தேனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்முரளீதரன் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் மற்றும் வங்கியாளர்களுக்கு விருதுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆண்டிபட்டி மகாராஜன், பெரியகுளம் சரவணக்குமார், தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், மகளிர் திட்ட அலுவலர் ரூபன்ராஜ் டாக்டர்இணை இயக்குனர் பரிமளம்.உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது 11,775 பயனாளிகளுக்கு ரூ.61 கோடியே 476 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டது.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!