தமிழகம்

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில், 24 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை

93views
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள, பிரசித்திபெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள், இந்து அறநிலையத்துறை கோவில் நகைகள் சரிபார்ப்பு துணை ஆணையர் பொன்.சாமிநாதன், இருக்கன்குடி கோவில் உதவி ஆணையர் கருணாகரன், கோவில் அறங்காவலர் ராமமூர்த்தி பூசாரி மேற்பார்வையில் நடைபெற்றது.
கோவிலில் உள்ள 12 உண்டியல்களும் திறக்கப்பட்டு, சாத்தூர் மற்றும் துலுக்கப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஓம்சக்தி பக்தர்கள் குழு மற்றும் கோவில் தன்னார்வலர்கள் மூலம் எண்ணப்பட்டது.
உண்டியல் காணிக்கையாக 24 லட்சத்து, ஆயிரத்து 265 ரூபாய் பணமும், 83 கிராம் தங்கமும், 490 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்திருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

செய்தியாளர்: வி காளமேகம்

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!