தமிழகம்

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

36views
கெங்கவல்லி வேம்படி பாலக்காடு பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகள் புவனேஸ்வரி (21) பி.காம்.பட்டதாரியான இவருக்கும் கெங்கவல்லி அருகே நரிப்பாடி பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் அருண் (21) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது காதலாக மாறியது இதற்கு புவனேஸ்வரியின் பெற்றோர்கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி மைசூருக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர் பின்னர் பாதுகாப்பு கேட்டு கெங்கவல்லி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதன் பேரில் இவரது பெற்றோரை அழைத்துஎஸ் ஐ மணிமாறன் பேச்சுவார்த்தை நடத்தினார் அப்போது புவனேஸ்வரி வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் அருணுடன் புவனேஸ்வரி அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது அவர்களுக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்க கூடாது என புவனேஸ்வரி பெற்றோரிடம் போலீசார் எழுதி வாங்கிக்கொண்டனர்.
செய்தியாளர் : ரா.மணிகண்டன், சேலம் கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!