தமிழகம்

திருமங்கலம் அருகே முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் அமைத்து வைத்த ஜெயலலிதா, எம்ஜிஆர் -ன் முழு உருவ வெண்கலச்சிலையில் அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து 6 -ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தினார் – ராஜ்யசபா எம்.பி.சந்திரசேகரன் பங்கேற்பு.

95views
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி குன்னத்தூரில் உள்ள முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் அமைத்து வைத்துள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர் முழு உருவ வெண்கல சிலை – யில், ஜெயலலிதாவின் ஆறாவது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, ராஜ்யசபா எம்.பி.சந்திரசேகரன் பங்கேற்று, மறைந்த ஜெயலலிதாவின் 6வது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, அவரது வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, ஏராளமான அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதாவின் சிலைக்கும், எம்ஜிஆர் சிலைக்கும், மாலை அணிவித்து அஞ்சலியை செலுத்தினர்.

அப்போது எடப்பாடியார் வாழ்க, ஆர்.பி.உதயக்குமார் வாழ்க என்று கோசம் எழுப்பினர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!